Home » ஆயிரத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு.

ஆயிரத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு.

Source

இலங்கை இராணுவத்தின் 75ஆவது நிறைவாண்டை முன்னிட்டு, 139 அதிகாரிகளுக்கும் ஆயிரத்து 273 வீரர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தின் 75ஆவது நிறைவாண்டு தினமான இன்று, பாதுகாப்பு அமைச்சு, இராணுவத் தளபதி ஆகிய தரப்புக்களின் பரிந்துரைக்கு அமைய, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தப் பதவி உயர்வுகளை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்.

சவால் மிக்க பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை இராணுவம் அதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கி, நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

பிரிவினைவாத போராட்டங்களை முடிவிற்குக் கொண்டுவர இராணுவம் மகத்தான பணிகளை நிறைவேற்றியதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image