Home » ஆறு கோடி ரூபா பெறுமதியான இரண்டு வாகனங்கள் மீட்பு.

ஆறு கோடி ரூபா பெறுமதியான இரண்டு வாகனங்கள் மீட்பு.

Source

ஆறு கோடி ரூபா பெறுமதியான நவீனமயமான டீ.ஆ.று கார் மற்றும் ப்ராடோ வகையைச் சேர்ந்த ஜீப் வண்டியையும், கண்டி குற்றவிசாரணைப் பிரிவு கைப்பற்றியுள்ளது.

கண்டி அணிவத்தயில் உள்ள வீடொன்றில் இவை மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வீட்டில் குடியிருந்தவர் களுத்துறை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் வகிக்கும் பிரபல அமைச்சர் ஒருவரின் மைத்துனர் என தெரியவந்துள்ளது.

கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களுக்கான சட்டபூர்வமான உரிமையாளர் தொடர்பான விபரம் தெரியவில்லை. இதனால் இவை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த காலத்தில் துறைமுக அதிகார சபையில் உயர் பதவியை வகித்தமையும் தெரியவந்துள்ளது. இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக துறைமுகத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image