Home » ஆழ்கடல் கொந்தளிப்பபு குறித்த எச்சரிக்கை அறிவித்தல்

ஆழ்கடல் கொந்தளிப்பபு குறித்த எச்சரிக்கை அறிவித்தல்

Source

காலியில் இருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வரையான தென்கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தம் இன்று வடமேல் திசையை நோக்கி நகர்கிறது. இதனால் வடமேல் வங்காள விரிகுடா கடல்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, புத்தளம், காலி ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம், மணிக்கு 55 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

இந்த கடற்பரப்புகளும் கொந்தளிப்பாக காணப்படலாம். இந்த எச்சரிக்கை குறித்து அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவ சமூகத்திற்கும், கடற்படையினருக்கும் அறிவுறுத்தியுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image