Home » இந்திய மீன்பிடி படகுகளுடன் 17 பேர் கடற்படையினரால் கைது.

இந்திய மீன்பிடி படகுகளுடன் 17 பேர் கடற்படையினரால் கைது.

Source

மன்னாருக்கு வடக்கே கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 2 இந்திய மீன்பிடி படகுகளுடன் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட மத்திய கடற்படை கட்டளை அதிகாரிகள் நேற்று காலை முதல் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீன்பிடி படகுகளை அவதானித்துள்ளனர்.

அதன்படி கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக 55 இந்திய மீன்பிடி படகுகளும், 413 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image