இந்திய வெளிவிவகார அமைச்சர் விரைவில் இலங்கை வரவுள்ளார்
.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் சில நாட்களுக்குள், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர் கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஆனால், அவரது விஜயம் தொடர்பான சரியான தினத்தை இந்திய வெளிவிவகார அமைச்சு இதுவரை அறிவிக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது. இலங்கையில் கடந்த காலத்தில் நிலவிய நெருக்கடிகளின்போது இந்தியா மனிதாபிமான, பொருளாதார ரீதியான பல்வேறு உதவிகளை இலங்கைக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.