Home » இன்னும் பத்து நாட்களில் பரீட்சை பெறுபேறுகள்.

இன்னும் பத்து நாட்களில் பரீட்சை பெறுபேறுகள்.

Source

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிடுவது நோக்கமாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்னும் பத்து நாட்களில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இதேவேளை, 2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image