Home » இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பற்றி வெளியான அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பற்றி வெளியான அறிவிப்பு

Source
இஸ்ரேலில் தாதிகளாக கடமையாற்றிய இரண்டு இலங்கை பெண்கள் காணாமல் போயுள்ளதாகவும், ஏனையவர்கள் வழமை போன்று தமது பணிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் காயமடைந்த இலங்கையரான சுஜித் பிரியங்கர வைத்தியசாலையை விட்டு வெளியேறி தனது விடுதியில் தங்கியிருப்பதாக தூதுவர் கூறுகிறார். இஸ்ரேலின் தற்போதைய நிலைமை மற்றும் அங்குள்ள இலங்கையர்களுக்கு ஒரு செய்தியையும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இப்பகுதியில் உள்ள இராணுவ சூழ்நிலை காரணமாக, முக்கியமாக இஸ்ரேல் மற்றும் காசா பகுதி, இஸ்ரேலின் நகர்ப்புற பகுதிகளில் ஏவுகணைகள் வீசப்படுகின்றன. நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது சைரன் சத்தம் கேட்டது. நானும் எங்கள் ஓட்டுநரும் நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு பாதுகாப்புக்காக அருகில் இருந்த பாலத்தின் கீழ் சென்றோம். அலுவலகத்தில் பணிபுரியும் போது கூட இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கின்றன. அந்த சமயங்களில் அனைவரும் பாதுகாப்பான அறைகளுக்குச் சென்று நிலைமை சீராகும் வரை தங்கியிருப்பார்கள். நேற்று இரவு, வடக்கு பிராந்தியத்தின் சில பகுதிகள் மற்றும் நாங்கள் வசிக்கும் பகுதியும் ஏவுகணைகளால் தாக்கப்பட்டன. எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பகுதியில் மூன்று முறை ஏவுகணை தாக்குதல்கள் நடந்தன. அந்த சமயங்களில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த தாக்குதல்களை தடுக்க இங்கு நிறுவப்பட்டுள்ள வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுகிறது. 2011 இல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட IRON Dome அமைப்பு, 4 முதல் 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏவுகணை பீரங்கி மற்றும் ஷெல் தாக்குதல்களைத் தடுக்கும். விபத்து என்றால், காற்றில் இருந்து வெடிக்கும் பாகங்கள் தரையில் விழுந்து உங்கள் உடலில் பட்டால் மட்டுமே அது நடக்கும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட, நமது தூதரகம் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் செயல்படுகிறது. நீங்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம். ஏவுகணை குண்டுகள் அல்லது பீரங்கித் தாக்குதல்கள் ஏற்பட்டால், சைரன்கள் கேட்கப்படும், அப்படியானால், அவை வெடிப்பதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு பாதுகாப்பு நிலைகளுக்குச் செல்லுமாறு நான் தெரிவிக்கிறேன். ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் இஸ்ரேலில் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image