Home » ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு அங்கிருந்து வெளியேற அவகாசம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு அங்கிருந்து வெளியேற அவகாசம்

Source

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக இரண்டு மாதகால பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை இது அமுலில் இருக்கும் என அந்நாட்டு ஆட்பதிவு, சுங்க மற்றும் துறைமுக பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பொது மன்னிப்பு காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக டுபாயில் உள்ள இலங்கைக்கான தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொதுமன்னிப்பு காலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தாய்நாடு திரும்புவதற்கான தற்காலிக சுற்றுலா ஆவணங்களுக்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image