Home » கடந்த அரசாங்கம் பெற்ற கடன்களை தற்போதைய அரசாங்கம் செலுத்த வேண்டும்.

கடந்த அரசாங்கம் பெற்ற கடன்களை தற்போதைய அரசாங்கம் செலுத்த வேண்டும்.

Source

எந்தவொரு திட்டமும் இன்றி கடந்த அரசாங்கம் பெற்ற கடன்களை தற்போதைய அரசாங்கம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

கடனை செலுத்துவதற்காக கடந்த அரசாங்கம் சுமார் 800 பில்லியன் ரூபாவை மாதாந்தம் தேசிய சந்தையில் இருந்து கடனாக பெற்றுள்ளது.

தற்போதைய அரசாங்கம் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பிணைமுறியில் இருந்து எடுக்கப்பட்ட கடனை தொடர்ந்தும் செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட கடன் தொகை நான்கு ஆயிரத்து 859 பில்லியன் ரூபாவாகும். அடுத்த வருடத்தில் அவை முதிர்ச்சியடையும் என்பதால், அவற்றை செலுத்த அரசாங்கம் மீண்டும் கடன் வாங்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image