Home » சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

Source

சகல மாவட்டங்களையும் சேர்ந்த தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் பற்றி இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை பொறுப்பேற்கப்படும்.

இது பற்றிய தகவல்களை தேர்தல் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை பத்து பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜேதாச ராஜபக்ஷ நேற்று கட்டுப்பணம் செலுத்தினார்.

ஐக்கிய சமூக கட்சி சார்பில் சிரித்துங்க ஜயசூரியவும், றுஹூணு மக்கள் முன்னணி சார்பில் அஜந்த டீ சொய்சாவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

கே.கே.பியதாசவும் நேற்று கட்டுப்பணம் செலுத்தியதாக தேர்தல்கள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image