Home » சஜித் பிரேமதாஸ சர்வதேச பொருளாதார நிபுணர்களுடன் பேசி வருவதாக தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸ சர்வதேச பொருளாதார நிபுணர்களுடன் பேசி வருவதாக தெரிவிப்பு

Source

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களின் சகல வாக்குகளும் சஜித் பிரேமதாஸவுக்கு கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்துள்ளார்.

இன்று காலி பத்தேகமவில் திரு.சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாற்றிய போது, திரு.வீரக்கொடி இந்த விடயத்தை குறிப்பி;ட்டார்.

நாட்டுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சர்வதேச பொருளாதார நிபுணர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றை மக்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என திரு.சந்திம வீரகொடி கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கூட்டத்தில் சங்கைக்குரிய பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் உரையாற்றுகையில், நாட்டையும் தேசத்தையும் புத்த சாசனத்தையும் பாதுகாக்கக் கூடிய தலைவராக சஜித் பிரேமதாஸ திகழ்கிறார் என குறிப்பிட்டார்.

நாட்டு மக்களுக்கு சரியான பாதையை காட்டும் பொறுப்பு பௌத்த பிக்குமாரை சார்ந்ததென மிஹிந்தலை ரஜ மஹா விகாரையின் தலைமை மதகுரு சங்கைக்குரிய வலவா ஹங்குனு வெவே தம்மரட்ன தேரர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image