Home » செந்தில் தொண்டமான் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதி

செந்தில் தொண்டமான் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதி

Source

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் தீர்வு பெற்று கொடுக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கம் மீது நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியது போல தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மாத்திரம் அன்றி அனைத்து ஏனைய பிரச்சினைகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போதைய ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என அவர் கூறினார்.

அதனால் மலையக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கட்டுக்கோப்புடன் இருந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image