Home » ஜனாதிபதி ராமன்ய நிகாயவின் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

ஜனாதிபதி ராமன்ய நிகாயவின் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

Source

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று முற்பகல் நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள ராமண்ய பீடத்திற்கு சென்று இலங்கை ராமண்ய பீடத்தின் மஹாநாயக்கர் மகுலேவே விமலநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுகொண்டார்.

அநுநாயக்க தேரர்கள், பதிவாளர்கள் தலைமையிலான மஹா சங்கத்தினர் இதில் கலந்து கொண்டு, ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர். அதனையடுத்து, மஹா சங்கத்தினருடன் ஜனாதிபதி சிறிது நேரம் கலந்துரையாடினார்.

அதன்போது, தற்போதைய பொருளாதார அரசியல் நிலைமைகள் குறித்து மஹா சங்கத்தினருக்கு ஜனாதிபதி விளக்கம் அளித்தார்.

தூதுவர்களை நியமிக்கும்போது, கற்ற, அறிவார்ந்த, வெளிநாடுகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பொறுத்தமானவர்களை நியமிக்குமாறும், ஆளுநர்களை நியமிக்கும்போது அரசியல் நோக்களுக்காக அன்றி, பொறுப்பானவர்களை நியமிக்குமாறும் மஹா சங்கத்தினர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.

அவ்வாறே, அமைச்சுக்களின் செயலாளர் பதவிக்கும் பொறுத்தமானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டவாறு தீர்மானங்களை எடுப்பதே தமது நோக்கமாகும் என தெரிவி;த்த ஜனாதிபதி, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் உரிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர் மீது வைத்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு மஹாசங்கத்தினரின் ஆசி என்றும் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என்று மகுலேவ விமலநாயக்க தேரர் தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image