Home » தமது ஆட்சியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

தமது ஆட்சியில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

Source

தமது அரசாங்க ஆட்சியில் மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்கப்படுமென்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் பின்னர் நாட்டில் குழப்பம் ஏற்படும் என பல குழுக்கள் அச்சமூட்டி வருகின்றன. அவ்வாறு எந்தவொரு குழப்பமும் ஏற்படாது.

அவசியமற்ற வகையில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டில் மாற்றம் செய்ய வேண்டிய சகல விடயங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

தேர்தலில் வெற்றியடைந்த சந்தர்ப்பத்திலிருந்து புதிய அரசியல் பயணம் ஆரம்பமாகும். பாராளுமன்றமும் கலைக்கப்படும் என்றும் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் சீரான அரசியலை ஏற்படுத்தி மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசாங்கம் உருவாக்கப்படும். தமது ஆட்சியில் இனவாதம், மதவாதம் காணப்படாது என்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image