Home » தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு.

தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு.

Source

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைப்பாளர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக ஜயசேகர தெரிவித்தார்.

இதேவேளைஇ இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபை மத்திய குழு மற்றும் அரசியல் சபை ஆகியன ஏகமனதான தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உரிமைகளும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கே அன்றி வேறு எவருக்கும் இல்லை.

அக்கட்சியில் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவை சஜித் பிரேமதாசவுக்கு வழங்க எவராலும் தீர்மானிக்க முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.

இரண்டுக்கும் சட்டரீதியான உரிமை உள்ள தனது குழுவுக்கு மாத்திரமே அதனை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image