Home » பாரிஸ் ஒலிம்பிக்: மகளிர் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் முன்னேறும் வாய்ப்பை தருஷி கருணாரட்ன இழந்தார்.

பாரிஸ் ஒலிம்பிக்: மகளிர் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் முன்னேறும் வாய்ப்பை தருஷி கருணாரட்ன இழந்தார்.

Source

பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் அடுத்தகட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இலங்கை வீராங்கனை தருஷி கருணாரட்ன இழந்திருக்கின்றார்.

நேற்று இடம்பெற்ற நான்காவது தகுதிகாண் போட்டியில் இரண்டாவது வாய்ப்பில் அவர் ஏழாவது இடத்தைப் பெற்றதால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் போயிருக்கிறது.

தகுதிகாண் போட்டியின் முதற்சுற்றில் தருஷி கருணாரட்ன எட்டாவது இடத்தை பெற்றதால், இந்த 19-வயது வீராங்கனைக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டது.

இரண்டாவது வாய்ப்பை வழங்கும் ஏற்பாடு பாரிஸ் ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image