Home » ருக்மன் சேனாநாயக்க காலமானார்

ருக்மன் சேனாநாயக்க காலமானார்

Source

இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவின் பேரன் ருக்மன் சேனாநாயக்க காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 76.

தனது உறவினரான டட்லி சேனாநாயக்கவின் மரணத்தின் பின்னர் தெதிகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய ருக்மன் சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் ஆவார்.

1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி பிறந்த ருக்மன் சேனாநாயக்க, ரொபர்ட் பராக்கிரம சேனாநாயக்க மற்றும் ஸ்வர்ண நீலா சேனாநாயக்க ஆகியோரின் மூன்றாவது பிள்ளையாவார்.

தெதிகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய ருக்மன் சேனாநாயக்க 1973 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார்.

1994 இல், ருக்மன் சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இரண்டாவது முறையாக பாராளுமன்றத்தில் நுழைந்தார் மற்றும் 2001 வரை பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

அவர் டிசம்பர் 2001 இல் கேகாலை மாவட்டத்திலிருந்து மீண்டும் பாராளுமன்றத்தில் நுழைந்து சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அமைச்சரவை அமைச்சரானார்.

அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ருக்மன் சேனாநாயக்க 2004 வரை அமைச்சரவை அமைச்சராக பதவி வகித்து 2004 பொதுத் தேர்தலில் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். 2007 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராகவும் 2008 இல் பிரதித் தலைவராகவும் பணியாற்றினார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image