லெபானில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிப்பு.
மோதல்கள் இடம்பெறும் லெபனானில் வசிக்கும் இலங்கைகள் பாதுகாப்பதாக இருப்பதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்களுடன் தூதுவர் ஆலயம் முழுமையான தொடர்பில் இருப்பதாக லெபனானில் உள்ள இலங்கை தூதுவர் கபில ஜயவீர தெரிவித்துள்ளார்.
சுமார் 7 ஆயிரத்து 600ற்கும் அதிகமான இலங்கையர்கள் லெபானில் பணியாற்றுகின்றார்கள். அவர்களில் அதிகமானோர் அந்நாட்டின் தெற்குப் பிரதேசத்தில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
லெபனானில் வடக்குப் பிரதேசத்தில் மோதல் நிலை காணப்படுவதாகவும் அங்கு இலங்கையர்கள் இல்லையெனவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.