Home » 50 கிலோ கிராம் எடையுள்ள உரம் ஐயாயிரம் ரூபாவுக்கு வழங்கப்படும் – எதிர்க்கட்சித் தலைவர்

50 கிலோ கிராம் எடையுள்ள உரம் ஐயாயிரம் ரூபாவுக்கு வழங்கப்படும் – எதிர்க்கட்சித் தலைவர்

Source

தமது ஆட்சியில் விவசாயிகளுக்கு தேவையான சிறந்த தரத்திலான 50 கிலோ கிராம் எடையுள்ள உரம் மூடை ஒன்றை ஐயாயிரம் ரூபாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பதின்நான்காவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பொலன்னறுவை, ஹிங்குராங்கொட நகரில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து உரையாற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

விவசாய இரசாயன மருந்துகள், உரம் என்பனவற்றுக்கு ஒழுங்கு முறையான விலை நிர்ணயத்தை மேற்கொண்டு, இருட்டடிப்புச் செய்கின்ற வர்த்தகர்களின் விலை அதிகரிப்புக்கு இடமளிக்காது,

மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமான விலைக்கு பொருட்கள் வழங்கப்படும். உர வினியோகத்தின்போது கம நல சேவைகள் மத்திய நிலையத்தை மையமாகக் கொண்டு வெளிப்படை தன்மையுடன் இந்த வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image