புத்தாண்டின் முதல் வேலை நாளான இன்று முற்பகல் 9 மணிக்கு ஜனாதிபதி செயலக வளாகத்தில் பணிகளை ஆரம்பிக்கும் பிரதான உத்தியோகபூர்வ வைபவம்
2023ஆம் ஆண்டுக்கான புதிய பணிகளை ஆரம்பிக்கும் பிரதான உத்தியோகபூர்வ வைபவம் இன்று காலை 9 மணிக்கு ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
முக்கிய நிகழ்வோடு அனைத்து அரச நிறுவனங்களிலும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
தேசியக் கொடியை ஏற்றிய பிறகு தேசிய கீதம் பாடப்படும்.
தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு அரச ஊழியர்களின் உறுதிமொழியும் வாசிக்கப்படவுள்ளது. இதேவேளை, புத்தாண்டில் பொதுச்சேவை பணிகளை ஆரம்பிப்பதற்கான உறுதிமொழி எடுக்கும் பிரதான நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.