தேசிய இளைஞர் மேடைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அமைவாக வடிவமைக்கப்பட்ட தேசிய இளைஞர் மேடை என்ற செயற்றிட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுலாகிறது.
2048ஆம் ஆண்டளவில் சுபீட்சத்துடன் கூடிய வலுவான நாடொன்றை கட்டியெழுப்பும் வேலைத்தி;ட்டத்துடன் இலங்கையின் இளைஞர்களை பங்குதாரர்களாக மாற்றுவது இதன் நோக்கமாகும். நாட்டில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான தலைமைத்துவத்தை இளைஞர் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.
சட்டம், பொருளாதாரம். கல்வி, தொழில்பயிற்சி, நிலையான அபிவிருத்தி உட்பட பல்வேறு துறைகள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.