நிலக்கரியை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கை வரவுள்ளது
நிலக்கிரியை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கை வரவிருக்கின்றது. நேற்று இலங்கை வந்தடைந்த கப்பலில் இருந்து நிலக்கரியை தரையிறக்கும் பணிகள் தற்சமயம் இடம்பெறுகின்றன. தலா 60 ஆயிரம் மெற்றிக் தொன் நிலக்கரியை ஏற்றிய 7 கப்பல்கள் இந்த மாதம் இலங்கை வரவிருப்பதாக, இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமணசேகர எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.