கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்கக் போர் கப்பல் கொழும்புக்கு வருகை!
அமெரிக்க கடற்படையின் USS ‘Anchorage’ (LPD-23) போர் கப்பல் இன்று (ஜனவரி 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
USS ‘Anchorage’ என்பது 208m நீளமுள்ள சான் அன்டோனியோ-கிளாஸ் ஆம்பிபியஸ் டிரான்ஸ்போர்ட் டாக் ஆகும். இது 477 பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கப்பலின் தளபதி (கேப்டன்) டி.ஜே.கீலர்,ஆகும்.
USS ‘Anchorage’ இன் கட்டளை தளபதி மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படைப் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்திக்க உள்ளார்.
2023 ஜனவரி 27 அன்று இந்த கப்பல் போர் இலங்கையில் இருந்து புறப்படும்.
N.S