தேர்தல் நிறைவடையும் வரை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளில் மாற்றம் ஏற்படாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும். நிதி இருக்குமாயின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் பின் நிற்காது. அரச நிதி நெருக்கடி பற்றி திறைசேரியின் செயலாளர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். இதன்படி, நீதிமன்றம் வழங்கும் தீர்மானங்களுக்கு அமைவாக அரசாங்கம் செயற்படும் என்றும் அமைச்சர் கூறினார். அமைச்ரவையின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்ற போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.