தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு என்கிறது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய செயற்குழுவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்தை பாராட்டிய ஜனாதிபதிஇ அதற்கு நன்றி தெரிவித்தார்.
அவ்வாறானதொரு இணக்கத்தின் மூலமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஏனைய தரப்பினர் பாரம்பரிய அரசியலில் ஈடுபட்டு வரும் இவ்வேளையில்இ அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கருத்தில்;கொள்வதே இதன் நோக்கமாகும்.
இந்த உடன்படிக்கைகள் மூலம் எதிர்காலத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான தேசிய கட்டமைப்பை தயாரிக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிக குறிப்பிட்டுள்ளார்.