Home » இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் விபரம் அறிவிப்பு

இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் விபரம் அறிவிப்பு

Source

இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் குழுவில் 18 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இலங்கை அணியின் தலைவராக தனஞ்ஜய டி சில்வா தொடர்ந்தும் பணியாற்றவுள்ளார். குஸல் மென்டிஸ் அணியின் உபதலைவராக பணியாற்றவிருக்கின்றார்.

பந்துவீச்சாளர் மிலான் ரத்நாய்கக, சகலதுறை ஆட்டக்காரர் நிசல தாரக்க ஆகியோரும் இலங்கைக் குழாமில் இடம்பெற்றுள்ளார்கள்.

2022ஆம் ஆண்டின் பின்னர் பத்தும் நிஸ்ஸங்க இலங்கை டெஸ்ட் அணிக்காக மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இம்மாதம் 21ஆம் திகதி மன்செஸ்ட்டர் நகரில் இடம்பெறவுள்ளது.

இரண்டாம், மூன்றாம் போட்டிகள் லோட்ஸ், ஓவல் ஆகிய மைதானங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image