Home » மியன்மார் இராணுவத் தளபதி சர்வதேச உதவியை கோரியுள்ளார்.

மியன்மார் இராணுவத் தளபதி சர்வதேச உதவியை கோரியுள்ளார்.

Source

யாகி சூறாவளியினால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்காக மியன்மார் இராணுவத் தளபதி மின் அவுன் சர்வதேச உதவியை கோரியுள்ளார்.

கடும் வெள்ளம் காரணமாக பலர் இடம்பெயர்ந்துள்ளனர். மண்சரிவு காரணமாக சுமார் 33 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பலர் காணாமல் போயுள்ளனர். இரண்டு லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மியன்மாரில் சில கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், குடியிருப்பாளர்கள் கூரைகளில் தங்கியுள்ளனர்.

சில பகுதிகளுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் அரசாங்கம் தெரிவித்துள்ளது. வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் யாகி சூறாவளியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image