கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை.
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
புத்தகக் கண்காட்சி அந்த நாட்களில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9 மணிக்கு நிறைவடையும். இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.