Home » ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரை. 

ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரை. 

Source

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இந்த உரை இரவு 7.30ல் இருந்து சகல இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாகவும் ஒலி-ஒளிபரப்புச் செய்யப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாகாண ஆளுனர்கள் இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

மத்திய மாகாண ஆளுனராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மாகாண ஆளுனராக முன்னாள் சிரேஷ்ட நிர்வாக சேவை உத்தியோகத்தர் பந்துல ஹரிஸ்சந்திர சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வடமாகாண ஆளுனராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி நாகலிங்கம் வேதநாயகனும் வடமத்திய மாகாண ஆளுனராக திஸ்ஸ குமாரசிறியும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக   ஊவா-வெல்லஸ்ஸ பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஜயந்தலால் ரத்னசேகர சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

சப்ரகமுவ மாகாண ஆளுனராக சம்பிகா ஜானகி ராஜகருணாவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image