Home » காசாவைப் போன்ற நிலை லெபனானிலும் உருவாகும்.

காசாவைப் போன்ற நிலை லெபனானிலும் உருவாகும்.

Source

ஹிஸ்புல்லா அமைப்பை வெறுத்து ஒதுக்குமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்மின் நெத்தன்யாஹ_ லெபனான் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இல்லாவிட்டால் காசாவில் ஏற்பட்டுள்ள அழிவுகளை லெபனானிலும் காண நேரிடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தரைவழி மூலம் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் வலுப்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் நெத்தன்யாஹ_வின் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

ஹிஸ்புல்லா அமைப்பை நிராகரிப்பதன் மூலம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் நெத்தன்யாஹ_ அறிவித்துள்ளார்.

லெபனான் மீது இஸ்ரேல் கடந்த மூன்று வாரங்களாக மேற்கொண்டுவரும் தாக்குதல்களினால் ஆயிரத்து 400 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 12 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image