Home » அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டத்திற்கு இந்தியா பாராட்டு.

அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டத்திற்கு இந்தியா பாராட்டு.

Source

தற்போதைய அரசாங்கம் ஊழல் எதிர்ப்பு மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளும் அரசியல் நிர்வாகம் தொடர்பில் இந்திய அரசாங்கம் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்சேஞ்சல் பாண்டே குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் கலாநிதி ஜயந்த லால் ரத்நாயக்காவுடன் திருகோணமலை ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் உதவி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வி, மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image