Home » தேசிய மருந்து உற்பத்திக்கு கியூபா ஒத்துழைப்பு.

தேசிய மருந்து உற்பத்திக்கு கியூபா ஒத்துழைப்பு.

Source

கியூபா அரசாங்கம் இலங்கையில் மருந்து உற்பத்தியில் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்ரெஸ் மார்செலோ கொன்ஸேலெஸ் கர்ரிடோ (Andrés Marcelo González Garrido) தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு கியூபா அரசாங்கத்தின் வாழ்த்துக்களை தூதுவர் தெரிவித்துக் கொண்டார்.

சுமார் 65 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதல், கியூப உதவியின் கீழ் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நுளம்பு ஒழிப்புத் திட்டங்களை மீண்டும் ஆரம்பித்தல், மருத்துவம் மற்றும் விளையாட்டுக்கான உதவித்தொகையை இலங்கையில் உள்ள பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அதன்போது கலந்துரையாடப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளாக கியூபா பொருளாதார சவால்களை எதிர்கொண்ட போதிலும், கியூபா வழங்கிவந்த தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image