Home » இலங்கை Vs மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான போட்டி இன்று.

இலங்கை Vs மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான போட்டி இன்று.

Source

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடர் தற்சயம் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளதால், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய போட்டியாக இன்றைய போட்டி காணப்படுகின்றது.

தம்புளை ரங்கிரி மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டி இரவு 7 மணியளவில் ஆரம்பமாகும்.

இதேவேளை 9வது மகளிர் ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் அவுஸ்ரேலிய மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டி டுபாயில் இரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இதனிடையே, இந்த போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி நாளை தினம் இடம்பெறவுள்ளது. போட்டியில் நியுசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகள் பங்கேற்கவுள்ளன.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image