Home » இ.தொ.கா பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல்

இ.தொ.கா பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல்

Source

நுவரெலியாவுக்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.

அத்துடன், இரு தரபினருக்கும் இடையில் விசேட சந்திப்பும் இடம்பெற்றது.

இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை, இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது இ.தொ.காவின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பிரதி தலைவர்கள் இந்திய உயர்ஸ்தானிகருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

மலையகத்தில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் குறித்தும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் குறித்து இ.தொ.காவால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image