Home » அமெரிக்கா விடுத்துள்ள அவசர எச்சரிக்கை – தேர்தலுக்கு முன்னும் பின்னும் இலங்கையில் அமைதியின்மை ஏற்படலாம்!

அமெரிக்கா விடுத்துள்ள அவசர எச்சரிக்கை – தேர்தலுக்கு முன்னும் பின்னும் இலங்கையில் அமைதியின்மை ஏற்படலாம்!

Source

இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு இலங்கை தயாராகி வரும் நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க பிரஜைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்னும் பின்னும் எதிர்ப்புகள் எதிர்பார்க்கப்படுவதால், இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகள் பாரிய ஒன்றுக் கூடல்களை தவிர்க்க வேண்டும்.

அத்துடன், அமைதியான பேரணிகள் கூட வன்முறையாக மாறக்கூடிய நிலைமைகள் உருவாகலாம்.” என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image