இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை ஒரு மத்தியஸ்த நாடாக பயன்படுத்த முடியும் என நாமல் பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அவர் இந்தியாவின் NDTV தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிட்டதாவது, கிரிக்கெட் துறையில் பாகிஸ்தானில் சமீப காலமாக ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமைகள் மற்றும் பிராந்திய இராஜதந்திர நடவடிக்கைகளில் விளையாட்டிற்கு உள்ள விரிவான பங்கு குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் நெருங்கிய உறவுகளை பேணிவருகிறது என்றும், பேச்சுவார்த்தைகளை எளிதாக்க ஏற்ற நிலைப்பாட்டில் உள்ளது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“நாங்கள் கிரிக்கெட்டை அரசியல் கருவியாக அல்ல, ஒரு விளையாட்டாகவே பார்க்கிறோம். அரசியலுடன் விளையாட்டை கலக்கக் கூடாது,” என அவர் வலியுறுத்தினார். விளையாட்டு நடவடிக்கைகள் அரசியல் பதற்றங்களிலிருந்து தனியே வைக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக அண்டை நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு இன்றியமையாதது என்றும், குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
The post இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம் appeared first on LNW Tamil.