Home » உயர் தொழிற்கல்வி பாடத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 31 வரை

உயர் தொழிற்கல்வி பாடத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 31 வரை

Source

கடந்த கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், உயர்தர தொழிற்கல்வி கற்கைநெறிக்கு எதிர்வரும் 31ஆம் திகதி வரை மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மாணவர்களை இணைத்துக் கொள்ளும் போது, கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு உயர்தர தொழிற்கல்வி பிரிவு உள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்து நிர்வாகிகளும், முன்னைய ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை விட, அதிகளவான மாணவர்களை தொழிற்கல்வியில் இணைத்துக் கொள்வதற்கான திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்.

இது குறித்து, வலய கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய அனைத்து பாடசாலைகளும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை பற்றிய தகவல்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image