Home » உரமானியம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்.

உரமானியம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்.

Source

விவசாயிகளுக்கான 25 ஆயிரம் ரூபா உரமானியம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்பட இருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் இருந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

பொலநறுவை, அனுராதபுரம், மஹியங்கனை, மகாவலி வலயங்கள் உட்பட ஏனைய சகல பகுதிகளிலும் உள்ள விவசாயிகளுக்கும் இந்த மானியத் தொகை வழங்கப்பட இருக்கின்றது.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 15 ஆயிரம் ரூபா பெறுமதியான உரமானியத்தை 25 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, மீனவர்களுக்குத் தேவையான எரிபொருள் மானியத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image