உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளாமை தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளாமை தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, வேட்புமனுக்கள், கட்டுப்பணம் எனபனவற்றை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் வழமையான முறையில் இடம்பெறுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் யாப்பிற்கு அமைய இந்த நடவடிக்கை இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.