Home » கிரிக்கெட் மோசடி குறித்து பேசத் தடை

கிரிக்கெட் மோசடி குறித்து பேசத் தடை

Source
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகளுக்கு அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் அவருக்கு கீழ் பணியாற்றும் அனைவருக்கும் எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. குறித்த அமைப்பு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளுக்கு அமைய கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய விசேட கணக்காய்வுக்கு அமைய, விசேட கணக்காய்வு வரைவு வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு எதிராக ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகள் பொய்யானவை மற்றும் அவதூறானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image