குடிசன மதிப்பீட்டிற்கான முதற்கட்ட ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளன
குடிசன மற்றும் வீட்டுத் தொகை மதிப்பிற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. முதற்கட்டத்திற்கான பட்டியல்படுத்தும் வேலைத்திட்டம் பூர்த்தியடைந்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் அனுரகுமார எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.