Home » கொழும்பு – மட்டக்களப்பு ரயில் விபத்து குறித்து விசாரணை.

கொழும்பு – மட்டக்களப்பு ரயில் விபத்து குறித்து விசாரணை.

Source

கொலன்னாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பெற்றோலை ஏற்றிச் சென்ற ரயிலில் மோதி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குழு இரண்டு வாரங்களில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில், மற்றுமொரு யானை பலத்த காயமடைந்துள்ளது.

விபத்து காரணமாக தடைப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image