இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் இந்திய உயர்ஸ்தானிகரயாலயத்தில் சந்தித்தனர்.
இந்தியாவில் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இடம்பெற்ற பயிற்சி திட்டத்துக்கு முதல் கட்டமாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருபது பேரை தெரிவு செய்து, அங்குள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அது சார்ந்த நிவனங்களில் பயிற்சி பெறுவதற்கான ஏற்பாடுகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னெடுத்திருந்தார்.
குறித்த பயிற்சியை நிறைவு செய்து அங்கு அவர்கள் பயிற்சி பெற்ற விடயங்களை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரயாலயத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு விளக்கமளித்ததுடன், அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.









The post செந்தில், ஜீவன் தலைமையில் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இதொகா குழு appeared first on LNW Tamil.