Home » தபால் மூல வாக்களிப்பு: விண்ணப்பிக்க வழங்கப்பட்டிருந்த கால எல்லை நீடிப்பு.

தபால் மூல வாக்களிப்பு: விண்ணப்பிக்க வழங்கப்பட்டிருந்த கால எல்லை நீடிப்பு.

Source

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்க வழங்கப்பட்டிருந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

நாளை நள்ளிரவு வரை இதற்காக விண்ணப்பிக்க முடியும். தபாலில் விநியோகத்தின்போது இடம்பெறக்கூடிய தாமதம் உட்பட பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணைக்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கின்றது.

இந்தக் காலப்பகுதி ஒருபோதும் நீடிக்கப்பட மாட்டாது. உரிய காலப்பகுதியின் பின்னர் கிடைக்கும் சகல விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூலம் வாக்களித்தவர்களும் இம்முறை பொதுத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்காக மீண்டும் விண்ணப்பிப்பது அவசியமாகும் என்றும் சமன் ஸ்ரீ ரத்நாயக்கா வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட இருக்கின்றன.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image