இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலிற்கான கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளது.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள தலா 5 சபைகளிற்குமான கட்டுப் பணம் இன்றைய தினம் கட்சியினால் நியமிக்கப்பட்ட மாவட்ட முகவர்களால் செலுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தமது கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளனர்.
இதேநேரம் ஏனைய மாவட்டங்களில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாளையும் நாளை மறுதினமும் தமது கட்டுப் பணத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
TL