இலங்கைக்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவர் டுபாயில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த கைது தொடர்பாக டுபாய் பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஷிரான் பாசிக், இலங்கைக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த முக்கிய ஐந்து பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
The post பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக் கைது appeared first on LNW Tamil.