Home » பிரேசில் விமான விபத்து: உயிரிழந்தவர்களுக்காக மூன்றுநாள் துக்கதினம்.

பிரேசில் விமான விபத்து: உயிரிழந்தவர்களுக்காக மூன்றுநாள் துக்கதினம்.

Source

பிரேசிலில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா த சில்வா (Luiz Inacio Lula da Silva) அனுதாபம் தெரிவித்துள்ளார்.

அங்கு மூன்று-நாள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் சோவ் பாலோவில் (Sao Paulo) நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர்.

விபத்தின் போது 57 பயணிகளும், நான்கு பணியாளர்களும் விமானத்தில் இருந்துள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதியில் இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இருப்பினும், அந்தப் பகுதியில் வசித்தவர்கள் எவரும் காயமடையவில்லை. அப்பகுதியில் இருந்த வீடொன்று மாத்திரம் சேதமடைந்துள்ளது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image