Home » புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்வது தொடர்பில் தீர்மானம் இல்லை.

புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்வது தொடர்பில் தீர்மானம் இல்லை.

Source

அண்மையில் நடத்தப்பட்ட 2024ஆம்; ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இப்பிரச்னையை விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. உரிய அறிக்கை கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

பிரச்னைக்கு காரணமான 3 கேள்விகளுக்கு ஒவ்வொரு மாணவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. குறித்த சம்பவம் காரணமாக பரீட்சைக்கு தோற்றிய எந்தவொரு பரீட்சார்த்திக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் செயற்படுவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களம் கடமைப்பட்டுள்ளது.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக பெற்றோர் குழுவொன்று நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image