முட்டை உற்பத்தியாளர் சங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தயாராகி வருகிறது
முட்டை உற்பத்தியாளர்கள் குழுவொன்று பொய்யான உற்பத்திச் செலவைக் காட்டி அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதனால் சந்தையில் முட்டை விலை 70 முதல் 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த முட்டை உற்பத்தியாளர்கள் தவறான உற்பத்திச் செலவுகளைக் காட்டி நுகர்வோரை சுரண்டுவதாக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
35 ரூபாய் பண்ணை விலையும், 42 ரூபாய் சந்தை விலையும் மிகவும் நியாயமானது. இந்த நிலையில், முட்டையின் விலையை நியாயமான விலைக்குக் குறைக்கும் வரை, முட்டை விநியோகத்தை நிறுத்துவோம் எனவும் மாரசிங்க எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், அனுராதபுரம் சிற்றுண்டிச்சாலை சங்கம் மற்றும் முட்டை உற்பத்தி சங்கம் என்பன நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முட்டை இறக்குமதி தொடர்பில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முட்டையின் விலையை கட்டுப்படுத்த மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இணக்கப்பாடு எட்டப்படுமென அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.