மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது
மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் ஸ்கேனர் இயந்திரத்தை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ இல்லத்தின் கூரையில் 650 கஞ்சா செடிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. விசேட அதிரடிப்படையினர் அவரை இன்று கைது செய்துள்ளனர். சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மொனராகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.